கச்ச தீவுக்காக குரல் கொடுத்த முதல் தமிழன் என்றால் அது மூக்கையா_தேவர் மட்டுமே..!


1974 ல்   கச்சதீவை  இலங்கைக்கு தாரைவார்த்து     மறைந்த பிரதமர் திருமதி .இந்திரா காந்தி நாடாளுமன்றத்தில் ( மக்களவையில் ) தீர்மானம் கொண்டுவந்தபொழுது  அன்றைக்கு ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினராக இருந்த - பார்வார்ட் பிளாக் கட்சியின் தலைவர் மறைந்த திரு .மூக்கையா தேவர் அந்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தில்  தனியொரு மனிதனாக   எதிர்த்து
.
" இந்த கட்ச தீவு என்பது எனது  நாட்டின் ஒரு பகுதி மட்டுமல்ல எனது தொகுதியின்  முக்கிய பகுதி இதனை இலங்கைக்கு கொடுக்கவேண்டிய அவசியம் என்ன? உலகத்தில் எந்த நாடும் தனது நிலப்பகுதியை யாருக்கும் விட்டு கொடுக்காது. அப்படி ஒரு நிலை ஏற்ப்பட்டால் அந்த நாடு போரில் தோல்வியடைந்துவிட்டது என்று அர்த்தம். இன்றைக்கு இலங்கையிடம் இந்திய தோல்வியடைந்து விட்டது. இது சரித்திரத்தில் ஒரு கறை"
என்று கண்டனம் தெரிவித்து  அந்த தீர்மான நகலை கிழித்து எறிந்துவிட்டு சபையை விட்டு  வெளியேறினார் .
.
அன்றைக்கு நாடாளுமன்றத்தில் திமுக, அதிமுக ,காங்கிரஸ் (பழைய ) உறுப்பினர்கள் யாரும் அந்த தீர்மானத்தை எதிர்க்கவில்லை. எல்லோரும் ஆதரித்தனர்.
.
தமிழக்தை ஒன்பது ஆண்டுகள் முதல்வராக ஆட்சிசெய்த  மறைந்த திரு. காமராஜரும் அன்றைக்கு   எந்தவித எதிர்ப்பும்   தெரிவிக்காமல் நாடாளுமன்றத்தில் அமர்ந்திருந்தார் என்பதுதான் பெரிய வேதனை !!!
.
இன்றைக்கு திமுக ,அதிமுக, காங்கிரஸ்  காட்சிகள் கச்சத்தீவு குறித்து பேசுவது மக்களை ஏமாற்றும் கேவலமான செயல்  என்பதை தமிழக மக்கள் தெரிந்துகொள்ளவேண்டும்

Comments

Post a Comment